கேரள முன்னாள் முதல்வர் பிணராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை கொளுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்:-
கேரளா முன்னாள் முதல்வர் பிணராயி விஜயனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதற்கு நாடு முழுவதும் சிபிஎம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமலாக்கத் துறையினரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 50-க்கு மேற்பட்டோர் ஒன்று திரண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை அவமரியாதை செய்து, எரித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐஎம் கட்சியினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
