திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் காப்பனாமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இனமே ஏழு உரிமை பெறு என்ற தலைப்பிலான மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவாரூர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். வரும் பிப்ரவரி 10ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்கான ஆலோசனை நடைபெற்றது.மேலும் இந்த கூட்டத்தில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியை தோற்கடிப்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்க செயலாளர். வெங்கட்ராமன் ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜுவ், இந்த மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் இரா. சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
















