மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் ஏப்.23ம் தேதி நடைபெறம் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்புஇன்று நடைபெற்றது. அதில் மயிலாடுதுறை சட்டசபை தொகுதியை சேர்ந்த வாக்குப்பதிவு முதன்மை அலுவலர்கள், அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெற்றது. இதில் 1916 பேரும், பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இதில் வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பு காலை 5.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு எவ்வாறு நடத்த வேண்டும், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவன்று வாக்குச்சாவடிகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்களின் வாக்குகளை பதிவு செய்யும் நடைமுறைகள், அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறை பணிகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, வட்டாச்சியர் சுகுமாறன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

















