சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி திடீர் ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி செருப்பால் அடித்து திடீர் ஆர்ப்பாட்டம்.மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை அழிக்க நினைப்பதாக கூறி மத்திய அரசு எதிராக மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் பாதயாத்திரை அறிவிப்பு.

சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பானுசேகர் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உருவப் படத்தினை தீயிட்டு கொளுத்தியும் செருப்பால் அடித்தும் திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது அவதூறு குற்றச்சாட்டு சுமத்தியதாக கூறி மத்திய மோடி அரசு மற்றும் மக்களவை சபாநாயகருக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இதனால்அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பின்னர் மாவட்டத் தலைவர் பானுசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பாராளுமன்றத்தில் இளம் தலைவர் ராகுல் காந்தி சில ஆக்கிரமிப்பு குறித்து பேசி கொண்டிருந்தபோது,அதற்கு குறிப்பிட்டு அவர் பேசக்கூடாது உண்மை மக்களுக்கு தெரிய கூடாது என்ற நோக்கத்தில் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தியுள்ளது.அப்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பிகள் மயிலாடுதுறை சுதா,கரூர் ஜோதிமணி ஆகியோர் மீது பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிரில்லா பொய்யான குற்றச்சாட்டை கூறி மத்திய மோடி அரசும் சபாநாயகரும் கண்டித்து இதை மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி சார்பில் நன்மையாக கண்டிக்கிறோம்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை அழிக்கும் நோக்கத்தில் செயல்படும் மத்திய அரசு கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து கிராமங்களில் சென்று போராட்டம் நடத்தப்படும்.மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் பாதயாத்திரை நடத்தப்படும்.காங்கிரஸில் தனிப்பட்ட நபர்கள் கூறும் கருத்துக்கு கட்சி பொறுப்பாகாது. தமிழக காங்கிரஸ் தலைமை, அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். சட்ட மன்ற தேர்தலில் கூட்டணியில் சீர்காழி அல்லது மயிலாடுதுறை தொகுதியை காங்கிரசுக்கு கேட்டு பெறுவோம் என்றார்.

Exit mobile version