ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் ஒரு மேடையில் பேசிய பொன்முடி விலைமாதுவுக்கும், வாடிக்கையாளருக்கும் இடையிலான உரையாடலை சொல்லி ஹிந்து மதங்களை கிண்டலடித்து பேசி இருந்தார்.
பொன்முடி பேசிய அந்த வீடியோ தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உச்சகட்டமாக தி.மு.க. தலைவர்களில் ஒருவரான கனிமொழி. அமைச்சர் பொன்முடியை கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டார். மேலும் தி.மு.க.,வின் துணை பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து பொன்முடியை நீக்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது மதுரை புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, புகாரில் முகாந்திரம் இல்லை என விசாரணையை முடித்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சட்டப்படி மனுதாரர் உரிய நிவாரணம் தேடலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.