விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் வி.ஏ.ஓ.,வாக இருப்பவர் இப்ராஹிம்,( 54), இவரிடம் அதே ஊரை சேர்ந்த சின்னதம்பி (34) என்பவர் விவசாய நிலத்தை அளந்து தர கோரி அணுகி உள்ளார். அதற்கு, வி.ஏ.ஓ. இப்ராஹிம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னதம்பி, லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற, லஞ்சம் ஒழிப்புதுறை, சின்னத்தம்பியிடம், ரசாயனம் தடவிய பணத்தை, வி.ஏ.ஓ., இப்ராஹிமிடம் கொடுக்க சொல்லி உள்ளனர், சின்னதம்பியும் அதே மாதிரி ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்துள்ளார். ஆனால், லஞ்சப்பணத்தை உதவியாளரிடம் கொடுக்க அறிவுறுத்தி உள்ளார் இப்ராஹிம்.
இதனை தொடர்ந்து, சின்னத்தம்பி லஞ்சப்பணத்தை உதவியாளர் சிங்காரத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இப்ராஹிம், சிங்காரம் ஆகிய இருவரையும் கூண்டோடு பிடித்தனர்.