சென்னை அணி ஆரம்பித்திலிருந்து சொதப்பிய போது ‘அந்த ஷைக் ரசீத், வன்ஷ் பேடி’ ரெண்டு பேரையும் அணிக்குள்ள எடுத்துட்டு வாங்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் வேண்டுகோளை வைத்துவந்தனர்.
அந்தளவு ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ஒரு வீரராக இருந்த வன்ஷ் பேடி, பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்ததால் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
டெல்லி பிரீமியர் லீக்கில் அனைவரையும் கவர்ந்த வன்ஷ் பேடியை சிஎஸ்கே மெகா ஏலத்தில் ரூ.55 லட்சம் கொடுத்து எடுத்த்திருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக குஜராத்தை சேர்ந்த உர்வில் பட்டேல் அடிப்படை விலையான ரூ.30 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.