முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு புகழ ஓர்செலுத்தினர்..

தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 78-ஆவது பிறந்த தினம் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது..
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில்.. திருவாரூர் நகர அதிமுக சார்பாக புதிய பேருந்து நிலையம் அருகில் திருவாரூர் அதிமுக நகர செயலாளர் ஆர்.டி. மூர்த்தி தலைமையில் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா திரு உருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்தும்… புது தெரு பகுதியில் உள்ள புரட்சித்தலைவி அம்மா மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது… தொடர்ந்து இனிப்புகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில்.. திருவாரூர் மாவட்ட அதிமுக பொருளாளர் ஏ. என். ஆர். பன்னீர்செல்வம்..மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கலியபெருமாள்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் எம். ஆர். பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் பி. கே.யு. மணிகண்டன் மற்றும் செந்தில், தகவல் தொழில்நுட்ப தஞ்சை மண்டல செயலாளர் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சின்ராஜ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ரயில் பாஸ்கர், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் புரபஷனல் மதியழகன், எம்ஜிஆர் கருப்பையன் மற்றும் அதிமுக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version