July 4, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கேரளாவில் பறவைக் காய்ச்சல் தேனி மாவட்ட தீவிர கண்காணிப்பு

by sowmiarajan
December 28, 2025
in News
A A
0
கேரளாவில் பறவைக் காய்ச்சல் தேனி மாவட்ட தீவிர கண்காணிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் (Bird Flu) பாதிப்பு ஏற்பட்டிருப்பதை மத்திய ஆய்வகம் உறுதி செய்துள்ளது. மேலும், அப்பகுதிகளில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க, தேனி மாவட்ட எல்லையோரச் சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பொது சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.

தேனி மாவட்டத்தின் முக்கிய நுழைவு வாயில்களான குமுளி, கம்பம்மெட்டு மற்றும் போடி முந்தல் ஆகிய மூன்று சோதனைச் சாவடிகளிலும் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். கால்நடை பராமரிப்புத் துறையின் நோய் புலனாய்வுப் பிரிவு மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தீவிரத் தணிக்கைக்கு உட்படுத்தி வருகின்றனர். இந்தப் பணிக்காக அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும், பின்னர் மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 8:00 மணி வரையும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கண்காணிப்புப் பணியின் ஒரு பகுதியாக, கேரளாவிலிருந்து வரும் லாரிகள், டெம்போக்கள் மற்றும் இதர கனரக வாகனங்களின் சக்கரங்களில் ‘குளோரின் டை ஆக்சைடு’ கலந்த சக்திவாய்ந்த கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும், தொற்று பரவலைத் தடுக்கச் சோதனைச் சாவடிகளைச் சுற்றியுள்ள சாலைப் பகுதிகளில் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு வருகிறது. சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், வாகனங்களில் வரும் நபர்களுக்குக் காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் பரிசோதித்து வருகின்றனர்.

தற்போது நிலவி வரும் சூழல் குறித்து வனத்துறை மற்றும் கால்நடைத் துறை அதிகாரிகள் கூறுகையில், “கேரளாவிலிருந்து கோழி, வாத்து உள்ளிட்ட பறவை இனங்கள் மற்றும் பன்றிகளைத் தமிழகத்திற்குள் கொண்டு வரத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்குத் தடை ஏதுமில்லை. எல்லையோரக் கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர். இந்தத் தீவிரக் கண்காணிப்புப் பணியால் தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Tags: healthinfluenzaprecautions publicsurveillance avian
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் பிரிவினைவாதத்திற்கும் தேசியத்திற்கும் தான் போட்டி: எச்.ராஜா கடும் சாடல்!

Next Post

‘டைப் 1’ சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகளுக்கு தேனியில் மருத்துவ தத்தெடுப்பு!

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்
News

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
Next Post
‘டைப் 1’ சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகளுக்கு தேனியில் மருத்துவ தத்தெடுப்பு!

'டைப் 1' சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகளுக்கு தேனியில் மருத்துவ தத்தெடுப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

0
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

0
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Recent News

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.