மயிலாடுதுறையில் இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி; நூற்றுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தலைக்கவசத்துடன் அணிவகுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்:-
மயிலாடுதுறையில் மயிலை இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தலைக்கவசம் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கதிர்வேல் கொடி அசைத்து தொடக்கி வைத்தார். பேரணி நகரின் பிரதான வீதிகளின் வழியாக சென்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார் மற்றும் 200க்கும் மேற்பட்ட மோட்டார் வாகன பழுது பார்ப்போர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
