கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆல்ஃபா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை குறித்து சிறப்புரைத்த மாணவர்களின் செயல் நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள ஆல்பா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இதில் பள்ளி நிறுவனர் ராஜசேகர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆடல் பாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக பள்ளி மாணவர்கள் வண்ண உடைகள் அணிந்து வந்து நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடல் பாடல்கள் உடன் பெற்றோர்களையும் பொது மக்களையும் கவர்ந்தது இந்த நிலையில் சமீப காலமாக தலைக்கவசம் அணியாமல் ஏற்படும் விபத்துகள் குறித்து எடுத்துரைக்கும் விதமாக பள்ளி மாணவர்கள் தாமாக முன்வந்து தலைக்கவசத்தில் முக்கியத்துவம் குறித்து நடனமாடி தலைக்கவசத்தின விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்களின் செயலுக்கு பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டுகளை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் சிலம்பம் போன்ற போட்டிகளில் பங்கு பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். .














