திருவாரூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அங்கன்வாடி பெண் ஊழியருக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை..திருவாரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
திருவாரூர் மாவட்டம்.. குடவாசல் தாலுக்கா, எரவாஞ்சேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா (40). இவர் அங்குள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டருகே.. 10-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஒருவர் கடந்த 2021- ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26- ந் தேதி மாயமானது..தொடர்பாக சிறுவனின் பெற்றோர் எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் கடையில் போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில்.. மேற்படி அங்கன்வாடி ஊழியரான லலிதா சிறுவனை கடத்திச் சென்று ஊட்டி மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறை எடுத்து தங்கியிருந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வந்ததன் பேரில்..லலிதாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் இது தொடர்பான வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது..
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதி விசாரணையை அடுத்து குற்றவாளி லலிதாவிற்கு 5 பிரிவுகளின் கீழ் மொத்தம் 54 ஆண்டுகள் சிறை தண்டனையும்,.. ரூ 18 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில்…இந்த 54 ஆண்டு கால சிறை தண்டனையும் ஏகபோகமாக 20 ஆண்டு காலத்தில் அனுபவிக்க வேண்டும்.. என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு சார்பில் ரூ 6 லட்சம் நிதியுதவி வழங்கவும் நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குற்றவாளி லலிதா போலீசார் மூலம் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.

















