திரையிலும் தரையிலும் ஹீரோ அஜித் குமார் தான் – நடிகர் கிங்காங்

மதுரை: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மதுரையிலுள்ள கள்ளழகர் கோயிலில் நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் கிங்காங் சுவாமி தரிசனம் செய்தார்.

விழா நாளில் கோயிலுக்கு வந்த அவர், அழகரை தரிசனம் செய்த பிறகு கோயிலிலிருந்து வெளியே வந்த போது, அவரது ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிங்காங், “இத்தனை நாட்களாக சித்திரைத் திருவிழாவைப் பற்றி தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் மட்டுமே பார்த்தேன். இன்று நேரில் வந்து அழகரை தரிசித்ததில் மிகுந்த ஆனந்தம் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் அழகரின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்,” எனக் கூறினார்கள்.

அவர் மேலும் கூறியதாவது:
“நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது எம்.எஸ். கிருஷ்ணன் காலத்திலிருந்தே வழக்கமான ஒன்று. அது நல்ல வளர்ச்சி. இப்போது நானும் 4–5 படங்களில் நடித்து வருகிறேன். கடவுளின் ஆசியும், ரசிகர்களின் ஆதரவும் எனக்கு தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

நடிகர் அஜித் ஒரு தன்னம்பிக்கையின் உருவம். திரையிலும், தரையிலும், குறிப்பாக கார் ரேசிங் போன்ற விஷயங்களில் கூட ஹீரோவாகவே திகழ்கிறார்.

அவரிடம் நடிகர் விஜயின் அரசியல் பயணத்தைப் பற்றி கேட்டபோது, “இப்போது கோயிலுக்கு வந்துள்ள சூழலில் அரசியல் தொடர்பான கேள்விகள் வேண்டாம்” என்று பதிலளித்தார்.

Exit mobile version