கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே முதன்முறையாக தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் AI தொழில்நுட பயிற்சி மையம் அறிமுகம் – தனியாக அதிக கட்டணங்கள் செலுத்தி பயிற்சி மையத்தில் படித்து வந்த நிலையில் கல்லூரி வளாகத்திலேயே AI தொழில்நுட பயிற்சி மையம் அமைக்கப்பட்டதால் மாணவிகள் மகிழ்ச்சி.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பம் மனிதர்களைப் போல சிந்திக்கும், எழுதும் மற்றும் உருவாக்கும் பெரு வளர்ச்சியை அடைந்துள்ளது. இது மருத்துவம், கல்வி, வியாபாரம் மற்றும் நம்முடைய அன்றாட வாழ்க்கை என அனைத்து இடங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இதற்காக கல்லூரி மாணவர்கள் AI தொழில்நுட பயிற்சி பெறுவதற்காக தனியார் நிறுவன பயிற்சி மையங்களை தேடி செல்கின்றனர். அதில் அதிக கட்டணங்கள் செலுத்தி பயிற்சிப் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்முறையாக தனியார் நிறுவனம் சார்பில் ஹோலிகிராஸ் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாகத்திலேயே AI தொழில்நுட்ப பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் கல்லூரி பயிலும் அதே நேரத்தில் மாணவிகள் பயிற்சி மையத்தில் பயிலும் விதமாக இது அமைந்துள்ளது. இதனால் மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்திலும் கல்லூரி நேரங்களிலேயே பயிற்சி பெறுகின்றனர். இந்த வசதி கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்முறையாக தனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்லூரி நேரத்திலேயே கல்லூரி வளாகத்தில் குறைந்த கட்டணத்தில் பயிற்சி மையம் அமைந்ததால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.













