சீர்காழி நகராட்சி 21 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முழுமதி இமயவரம்பன். இவரது வார்டுக்கு உட்பட்ட வடக்கு தெரு,பனமங்கலம், துறையூர், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 550க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நகர்மன்ற உறுப்பினர் முழுமதி அவரதுமகன், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் மார்கோனி சொந்த செலவில் 1 கிலோ பச்சரிசி 2 முழு கரும்பு,ஒரு கிலோ வெல்லம் முந்திரி திராட்சை, மஞ்சள், நெய், பிஸ்கட் பாக்கெட், ஏலக்காய் கொண்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்ப அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதனை ஆர்வமாக முதியவர்கள் பெண்கள் சிறுவர்கள் பெற்றுச் சென்றனர்.விழாவிற்கு அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பதாகையில் கமிஷன் வாங்காத கவுன்சிலர் என அச்சிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது .இது அப்பகுதி மக்களிடம் கவனத்தை ஈர்த்தது















