மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் இன்று கோடை வெப்பம் அதிகரித்ததை முன்னிட்டு, கோவில் யானை அபயாம்பிகைக்கு சிறப்பு குளியல் ஏற்பாடு…
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை மயிலாடுதுறை மக்களின் அன்பையும் பக்தர்களின் கவனத்தை ஈர்க்கும் அம்சமாக திகழ்கிறது. தொடர்ந்து கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தும்பிக்கையால் ஆசீர்வாதம் வழங்குவதும் இந்த கோவில் யானை திருவிழாக்கள் தேரோட்டம் சிறப்பு பூஜைகள் போன்ற சமய நிகழ்ச்சிகளில் அலங்கரிக்கப்பட்டு பங்கேற்பது வழக்கம் அந்த வகையில் இன்று கோடை வெப்பம் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் யானைக்கு தினசரி குளியல் அளிக்க வேண்டும் என்று எண்ணி தினமும் காலை மாலை என இரு வேலைகளிலும் யானைக்கு குளியல் நடைப்பயிற்சி ஓய்வு இவற்றை வழக்கமாக செய்து வருவதுடன் அவற்றுக்கு தேவையான கரும்பு வாழைப்பழம் தேங்காய் போன்ற உணவுப் பொருட்களையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர் யானைப்பாகன் உடன் நல்ல பாசப்பிணைப்பை கொண்டு இருக்கும் யானை அவரின் குரலின் கட்டளைகளை எளிதில் புரிந்து கொண்டு அவர் சொல்வதற்கு ஏற்ப
கோவில் வளாகத்தில் உள்ள பிரத்யேக குளத்தில் யானை அபயாம்பிகை மகிழ்ச்சியுடன் நீராடியது. தண்ணீரில் சுறுசுறுப்பாக விளையாடிய அபயாம்பிகையை பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
கோடை வெப்பத்திலிருந்து யானைக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கோவில் நிர்வாகம் இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்ததாக தெரிவித்தனர். யானையின் நலனைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாயூரநாதர் கோவிலில் யானை அபயாம்பிகை குளித்த காட்சி, அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.













