விழுப்புரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம்,நியாயமான ஊதியம்,பணி பாதுகாப்பு ,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்தோட டு முற்றுகை போராட்டம் நடைபெற்றது
இன்று தமிழகம் முழுவதும் மண்டல,மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களை டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலசங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ராமஜெயம் தலைமையில் குடும்பத்தோடு முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர் பணி நிரந்தரம் ,ஊதியம் உயர்வு,பணி பாதுகாப்பு ,ஓய்வூதியம்,உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கண்டன கோஷங்களை எழுப்பினர் பின்னர் அவர்கள் கூறுகையில் கேரளாவில் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தை போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும் மேலும் தற்போது தமிழக அரசு 25 சதவீதம் உயர்த்தியது நாங்கள் வாங்கும் சம்பளம் 12 ஆயிரம் ரூபாயில் பெரும் 2500 மட்டுமே உயர்த்தியுள்ளது என்றும் வெறும் 14 ,15 ஆயிரம் சம்பளத்தில் எப்படி குடும்பத்தை நடத்தமுடியும் என்றும் தமிழக அரசு பணி நிரந்தரம் செய்து உதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்













