ஐபிஎல் 2025 தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்களை குவித்து, உயர்ந்த இலக்கை நிர்ணயித்துள்ளது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் ரோஹித் சர்மா மற்றும் ரிக்கல்டன் பந்துகளை சமாளிக்க சுருக்கமாக ஆடியபோதும், 4வது ஓவரில் தாக்குதலை துவங்கினர். டிஆர்எஸ் உதவியுடன் ரோஹித் சர்மா அவுட்டில் இருந்து தப்பியதும், ஜோடி களத்தை கலக்க தொடங்கியது.
ரிக்கல்டன் பந்துகளை பவுண்டரிகளாக மாற்றி அசத்தினார். 29 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், ரோஹித்துடன் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தார். ரிக்கல்டன் 61 ரன்கள் எடுத்து வெளியேற, ரோஹித் சர்மாவும் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மீதி இன்னிங்ஸை சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா கையாள, 18வது ஓவரில் ஃபரூக்கி வீசிய ஓவரில் மட்டும் 21 ரன்களை குவித்தனர். கடைசி ஓவரில் கூட ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸுடன் 13 ரன்கள் சேர்த்து மும்பை அணியின் ஸ்கோரை 217 என உயர்த்தினர்.
200 ரன்களுக்கு மேல் அடித்தால் தோல்வி இல்லை – தொடருமா அந்த சாதனை?
மும்பை இதுவரை 200+ ஸ்கோர் செய்து தோல்வியை கண்டதில்லை. ஆனால், ராஜஸ்தான் அணியின் மேல் வரிசை வீரர்கள் வேகமாக ரன் சேர்த்துவிடவில்லை என்றால், மும்பை அணி மீண்டும் அதே மரபை தொடரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.