விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் அக்கட்சியின் பொதுசெயலாளர் என். ஆனந்த் தலைமையில் வழங்கினார். அப்போது மேடையில் பேசிய அக்கசியின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிறந்த நாளை 365 நாளும் கொண்டாடும் கட்சியாக உள்ளதாகவும்,
தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றதால் எப்போதும் அந்த ஊர்மக்களுக்கு நன்றி உணர்வோடு தமிழக வெற்றிக்கழகம் இருக்கும் என்றும் விக்கிரவாண்டி மக்கள் பார்கிங் வசதி மாநாட்டிற்காகவும், பார்க்கிங் வசதிக்காகவும் 427 ஏக்கர் அளவு இடம் கொடுத்ததால் சிறிய உதவி செய்தாலும் கடைசி வரை மறக்க கூடாது என கட்சி தலைவர் வலியுறுத்தியதாக தெரிவித்தார். மூன்று மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய 18 லட்சம் ரூபாய் விஜய் வழங்கியபோதும் அதனை கொடுத்த பிறகு போட்டோ எதுவும் எடுக்க கூடாது வெளியில் கூற கூடாதென கட்டளையிட்டவர் தான் விஜய் என பெருமிதம் தெரிவித்தார்.
தாய்மார்கள் வயிற்றில் குழந்தைகள் இருக்கும்போதே விஜய்யின் பாட்டு கேட்டாலே அசைவு இருக்கும் என்றும் நாளொன்றுக்கு 60 நபர்களுக்கு தினந்தோறும் ரத்தம் கொடுத்து கொண்டிருக்கும் கட்சியாக தவெக உள்ளதாகவும்,மக்கள் சந்தோசத்துடன் தமிழக வெற்றிக்கழகத்தை அழைக்கிறார்கள் என்றால் அதற்கு தலைவர் விஜய் தான் காரணம்,விஜய் பெயரை வைத்து கொண்டு சேவை செய்யும் கட்சியாக தவெக உள்ளதாக கூறினார்.தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 தேர்தலில் தமிழக முதலமைச்சராக விஜய் அமருவார் அவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் தவறு செய்யும் கட்சியினர் தவெக இல்லை அப்படி செய்யும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இப்போது டிரண்டாகி வருகிறது தவெக கட்சி துண்டினை போட்டு கொண்டு பிரச்சனை செய்வது கொண்டுள்ளார்கள் அப்படி இருப்பவர்கள் பத்து நாட்களுக்கு முன்னர் தவெகவிற்கு வந்தவர்களாக இருக்கிறார்கள்,
அரசியல் பன்னுவதற்கு தைரியம் தில் இருக்க வேண்டும் எத்தனை வழக்குகள் போட்டாலும் அரசியல் செய்வோம், முன்னாடி இருந்து பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் பின்னாடி இருந்து குத்த கூடாது என்றும் எதைப்பற்றியும் யாரை பற்றியும் கவலை படமாட்டோம் என்றும் மக்களுக்கான சேவை செய்யும் யாருக்கும் எதற்காகவும் பயப்பட மாட்டோம் என என் ஆனந்த் தெரிவித்துள்ளார்.