முதலுதவிக்காக ரூ.33 ஆயிரம் – அதன்பின் மாதம் ரூ.3 ஆயிரத்தில் அன்லிமிட்டெட் இணையம் !
புதுடெல்லி :
உலகின் முன்னணி தொழில்முறை அறிஞரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை, இந்தியாவில் தனது வருகையை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறையிடமிருந்து அனுமதி பெறப்பட்ட ஸ்டார்லிங்க், வருகிற இரண்டு மாதங்களில் சேவையை துவக்க திட்டமிட்டுள்ளது.
நகரம்-கிராமம் என வேறுபாடின்றி ஒரே நிலைத்தரம் :
சாதாரண கம்பி இணைப்புகளுக்கு மாறாக, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவையை வழங்குகிறது. இதனால், நகரமோ, கிராமமோ என்பதைப் பொருட்படுத்தாமல் அனைத்து இடங்களிலும் ஒரே வகை வேகத்துடன் இணையம் கிடைக்கும் என்பது முக்கிய சிறப்பாகும்.
வாடிக்கையாளர்களுக்கான விலை விவரம் :
இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் இந்தியர்கள், முதலில் ரூ. 33,000க்கு ஸ்டார்லிங்கின் டிஷ் கருவியை வாங்க வேண்டும். பின்னர், மாதம் ரூ. 3,000 செலுத்த அன்லிமிடெட் இணைய சேவையை பெற முடியும் என ஸ்டார்லிங்க் தெரிவித்துள்ளது.
மேலும், அறிமுக சலுகையாக, ஒவ்வொரு புதிய வாடிக்கையாளருக்கும் ஒரு மாத இலவச சேவையும் வழங்கப்படவுள்ளது.
இந்தியாவில் உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனம் :
இது வரை யூடெல்சாட் ஒன்வெப் மற்றும் ஜியோ சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களே இத்தகைய செயற்கைக்கோள் இணைய சேவைக்கான உரிமம் பெற்றிருந்தன. இப்போது ஸ்டார்லிங்கும் அந்த பட்டியலில் மூன்றாவதாக இணைந்துள்ளது.
தொலைதூர பகுதிகளுக்கு நம்பிக்கையூட்டும் தீர்வு :
தொழில் வல்லுநர்கள் தெரிவித்ததாவது :
“ஸ்டார்லிங்கின் வருகை, இந்தியாவின் தொலைதொடர்பு சந்தையில் புதிய போட்டியை உருவாக்கும். குறிப்பாக கிராமப்புறங்கள், மலையகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொலைதூர வணிகங்கள் போன்ற இடங்களில் நம்பகமான இணைய வசதி கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.”