11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக டில்லியில் விளக்கம் அளித்த முதல்வர்
புதுடில்லி: பெங்களூருவில் நடைபெற்ற ஆர்.சி.பி. அணியின் வெற்றிப்பாராட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கர்நாடகா முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் இன்று (ஜூன் 10) டில்லி சென்றனர்.
அங்கு அவர்கள், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை நேரில் சந்தித்து, இந்த சம்பவம் குறித்த விரிவான விளக்கத்தை வழங்கினர். விழா ஏற்பாட்டில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் போலீஸ் துறையின் தவறுகளால் ஏற்பட்டது என முதல்வர் சித்தராமையா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா உட்பட சில உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த சம்பவம் மாநில அரசின் செயல்முறைகள் மீதான விமர்சனங்களை தூண்டி விட்டுள்ளது. எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த பிரச்சினை தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு கேடு ஏற்படுத்தும் சூழ்நிலையில், கட்சி மேலிடம் சித்தராமையாவை டில்லிக்கு அழைத்து விளக்கம் கேட்டது குறிப்பிடத்தக்கது.