திருவாரூரில் உள்ள ரேஷன் கடைகளுக்கு போதுமான அளவு பொருட்களை அரசு வழங்கவில்லை – வெளியூர் மக்கள் 20ஆம் தேதிக்கு பிறகு, அதுவும் பொருட்கள் இருப்பு இருந்தால் மட்டுமே பொருட்களை வழங்க முடியும் – ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் சமூக வலைத்தளங்களில் வைரல்..
நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு துறைகளின் மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மீதான மானிய கோரிக்கையில் அமைச்சர் பி வெங்கடரமணன் கூறுகையில்,
நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்கள் தங்களுக்குரிய கடைகளில் மட்டும் தான் பெருட்கள் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழ்நாட்டில் எந்த கடைகளில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம். நியாய விலை அட்டை கையில் இல்லாவிட்டாலும் அட்டையின் ‘சாப்ட் காப்பி’ மொபைல் போனில்இருந்தால் கூட பொருட்களை வாங்கி கொள்ளலாம்”என்று கூறி இருந்தார்.
ஆனால் நடைமுறை நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களிடம் கறாராக கூறுகின்றனர். ரேஷன் கார்டு இல்லை என்றால் பொருட்கள் வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறுகின்றனர்.
ஆனால் உணவுத்துறை அமைச்சர் ரேஷன் கார்டு இல்லாமலும் பொருட்களை வாங்கலாம் என கூறியிருக்கிறாரே… எல்லா டிவி சேனல்களும் செய்திகள் வெளியாகி உள்ளனவே நீங்கள் பார்க்கிற வில்லையா என பொதுமக்கள் கேட்கும் போது…. எங்கள் வீட்டில் டிவி இல்லை. நான் செய்திகள் பார்ப்பது இல்லை. எங்கள் அதிகாரிகள் கூறியபடி தான் நான் நடக்க முடியும் எனக்கு கூறுகின்றனர்.
மேலும் அந்தந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மட்டும்தான் ரேஷன் கடை பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், வெளியூர் ரேஷன் கார்டு தாரர்களுக்கு 20 ஆம் தேதிக்கு பிறகு, கடையில் பொருள் இருப்பதன் அளவு பொறுத்தே அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.
திருவாரூர் அருகே, EB காலணி பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடை எண் 18AP041PN கடையில் பொருட்கள் வாங்க செல்லும், வெளியூர் மற்றும் வேறு கடையில் குடும்ப அட்டை வைத்துள்ள சாமானிய மக்களுக்கு பொருட்கள் வழங்க முடியாது என்றும், 20 தேதிக்குப் பிறகு வந்தால் இருப்பு இருப்பதன் அடிப்படையில் பொருட்களை வழங்குவோம் என்றும் கூறுகின்றனர்.
மேலும் தமிழக அரசு போதுமான அளவு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்புவது இல்லை என்றும் அரசு மீது குற்றச்சாட்டை ரேஷன் கடை ஊழியர்கள் எழுப்புகின்றனர்.இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைராக பரவி வருகிறது.
அரசும் அமைச்சரும் சட்டசபையில் ஒன்று கூறுகிறது. ஆனால் கள நிலவரம் வேறு மாறியாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். என பொதுமக்கள் புலம்பியபடியே செல்கின்றனர்.













