முத்தம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழாவில் வனத்துறை அமைச்சர் பங்கேற்பு.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த முத்தம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் திருக்கோயிலின் நூதன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னதாக செவ்வாய் மற்றும் புதன்கிழமை கிழமை அன்று காலை மற்றும் மாலை நேரங்களில் யாக வேள்வி அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இன்று காலை மங்கள இசை, 4- ஆம் கால யாக வேள்வி பூஜை, விஸ்வரூப தரிசனம், சுப்ரபாதம் புண்யாஹாவாசனம், அக்னிப்ரணயனம், ஹோமம், தம்பதியர்கள் மஹாசங்கல்பம், ப்ரதான ஹோமங்கள் மஹாபூர்ணாஹுதி, கும்பயாத்ராதானம்
ஸ்ரீ விநாயகர் சம்ப்ரோக்ஷணம்
ஸ்ரீ ராமாநுஜர், ஸ்ரீ கருடாழ்வார் சம்ப்ரோக்ஷ்ணம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து கோபுரத்தில் உள்ள ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் திருக்கோயிலின் ஆலய நூதன ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் மஹாகும்பாபிஷேக வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதி ஆகியோர் பங்கேற்றனர். சுற்றுவட்டார கிராமங்களான ப.முத்தம்பட்டி, பொன்னேரி, குனிச்சி, அனேரி, சென்றாயகவுண்டனூர், புலிக்குட்டை, பெருமாபட்டு, தும்பேரி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.













