குத்தாலம் அருகே மருத்தூர் கிராமத்தில் வண்டல் மண் எடுக்க 3.50 லஞ்சம் பெற்ற மருத்தூர் கிராம உதவியாளர் கைது. குத்தாலம் வட்டாட்சியர் பெயரை சொல்லி முறைகேடாக பெற்ற பணத்தை திருப்பி கேட்ட நபரை ஜாதிப் பெயரை சொல்லி தரக்குறைவாக பேசியதாக ஆதாரத்துடன் அளித்த புகாரின் பேரில்
செம்பனார்கோவில் போலீசார் கிராம உதவியாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மடப்புரம் இந்திரா நகரை சேர்ந்த பாலாஜி (46) என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மருத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றுள்ளார். அனுமதி பெறுவதற்கு குத்தாலம் வட்டாட்சியருக்கு ஒரு நாளைக்கு 35 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி மருத்தூர் கிராம உதவியாளர் எலந்தகுடியைச் சேர்ந்த நல்ல முகமது (40) என்பவருக்கு 3.50 லட்சம் பணம் கொடுத்துள்ளார். தொடர்ந்து குத்தாலம் வட்டாட்சியருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று பொய்யான தகவலை கூறி நல்ல முகமது தன்னிடம் லஞ்சம் பெற்றது தெரிய வந்ததால் பாலாஜி பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். இதுகுறித்து குத்தாலம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நல்ல முகமது
தனது செல்போன் வாயிலாக பாலாஜியை தொடர்பு கொண்டு ஜாதியை சொல்லி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து நல்ல முகமது தன்னை தரக்குறைவாக பேசும் செல்போன் ஆடியோவை செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நல்ல முகமதுவை கைது செய்த செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கிராம உதவியாளர் நல்ல முகமதுவை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேட்டி சங்கமித்ரன் வழக்கறிஞர்













