நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சியாக கொண்டாடப்படுகிறது இதனைத் தொடர்ந்து வடசென்னை பகுதிகளில் பிரமிக்க வைக்கும் வகையில் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்
. கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற விநாயகரை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்
இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வடசென்னை கொளத்தூர் பகுதிகளில் பிரமிக்க வைக்கும் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு வருகின்றன இந்த நிலையில்
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியில் 2700 செம்பு தகடுகளால் ஆன பிரேம் செய்யப்பட்ட கண் திருஷ்டியை இயந்திரங்கள் 2800 லோக தகடுகளால் ஆன சூரிய இயந்திரம் ஆகியவை கொண்டு செய்யப்பட்ட சுமார் 40 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது இந்த சிலை இந்து முன்னணி அமைப்பினரால் வைக்கப்பட்டுள்ளது இதற்கு முந்திய வருடமும் இதே போல் சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
அதேபோல் கொளத்தூர் ரெட்டேரி பிரதான சாலையில் சுமார் 12,000 சங்கு களால் ஆன வெள்ளை சங்கு விநாயகர் அமைக்கப்பட்டுள்ளது இந்த சங்கு விநாயகர் சுமார் 40 அடி உயரம் கொண்டதாகவும் உள்ளது இந்த இரண்டு விநாயகர் களையும் பொதுமக்கள் கண்டு தரிசித்து வருகின்றனர்
அதேபோல் கொளத்தூர் பக்கத்து வீட்டு பகுதியில் ரூபாய் நோட்டுகளால் ஆன பிள்ளையார் வைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது இதனை பொதுமக்கள் கண்டுகளித்து பிள்ளையாரை வழிபட்டு வருகின்றனர்
பேட்டி ராஜேஷ் குமார் மக்காரா தோட்டம்
மற்றும் பால்ராஜ் பூம்புகார் உலோக தகடுகளான பிள்ளையார் விழா குழு தலைவர்
















