மயிலாடுதுறையில் உலகப் பிரசித்தி பெற்ற துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து நடந்தாய் வாழி காவேரி பாடல் பாடி மலர்கள் தூவி வரவேற்று பொதுமக்கள் உற்சாகம்:-
தமிழக முதலமைச்சர் விஜய் மேட்டூரில் இருந்து காவிரி நதியில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தண்ணீர் திறந்து விட்டார். கல்லணைக்கு வந்தடைந்த தண்ணீர் ஆறாம் தேதி திறக்கப்பட்ட நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு விக்ரமன் தலைப்பு நீர்ஒழுங்கி (மதகு) வந்து சேர்ந்தது. அங்கு வினாடிக்கு 803 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் 3மணிக்கு மயிலாடுதுறைக்கு வந்தடைந்தது. கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடிய புராண வரலாறு கொண்ட காவிரி துலா கட்டத்திற்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. இதைக் காண ஏராளமான பொதுமக்கள் காவிரி துலா கட்டத்தில் குவிந்தனர். நடந்தாய் வாலி காவேரி என்று பாடல் பாடியும் ஆரத்தி எடுக்கும் சூடம் ஏற்றியும் பொதுமக்கள் காவிரித் தாயை வரவேற்று உற்சாகமாக வணங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீண்ட நெடுந்தூரம் பயணித்து வந்த காவிரி நீர் நாளை மலையில் உள்ள கடைசி கதவணைக்கு சென்று சேர்ந்தபின் அங்கிருந்து பூம்புகார் கடலில் கலக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

















