மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய் துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு. பேரிடரில் பொதுமக்களுக்கோ கால்நடைகளுக்கு எவ்வித உயிரிழப்பு பொருள் சேதம் ஏற்படாத வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பேட்டி:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய் துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் நில நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளான அரசு செயலாளர் கே எஸ் பழனிச்சாமி, கூடுதல் ஆணையர் மலர்விழி, பேரிடர் மேலாண்மை ஆணையர் சிவஞானம், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜமால் முகமது யூனூஸ், செந்தில் செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனைக்குப் பின் இக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் வடகிழக்கு பருவமழை மற்றும் சூப்பர் எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கோ கால்நடைகளுக்கோ எவ்வித உயிரிழப்பு, பொருள் சேதமோ ஏற்படாத வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது மாவட்டத்தில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் கழிவுநீர் சாக்கடைகளை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளன. 200 பணியாளர்களைக் கொண்டு சாக்கடைகள் மற்றும் அடைப்புகள் முழுமையாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும். கடலோரப் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானால் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும். பேரிடர் காலத்தில் அனைத்து துறை அதிகாரிகள் தன்னார்வலர்கள் செய்தியாளர்களை உடனுக்குடன் தொடர்பு கொள்ளும் வகையில் பிரத்யேக கையேடு மற்றும் அவசர எண்கள் அடங்கிய டைரி வெளியிடப்பட்டுள்ளது.. பயிர் சேதங்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பர் இறுதிக்குள் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு விவசாயிகளுக்கான உரிய நிவாரணம் வழங்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறையை போக்க தற்காலிக மருத்துவர்கள் நியமனம் மற்றும் கூடுதல் ஆம்புலன்ஸ் உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்தடையை போக்கும் வகையில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யவும் பேட்டரி சேமிப்பு மற்றும் சோலார் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறை அலுவலர்களும் இந்த மாத இறுதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

















