சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வந்த் என்ற இளம் செஸ் வீரருக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க பொதுமக்கள்உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் அஸ்வந்த் அவருடைய தந்தை சிவா செஸ் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வருகிறார் .சிறு வயது முதலே செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அஸ்வந்த் தனது மூன்றாவது வயதில் இருந்து தந்தையின் செஸ் விளையாட்டு பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் புனேயில் நடைபெற்ற சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் கடைசி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதி சுற்றில் அமெரிக்கா வீரர் கண்ணன் வைத்தியநாதன் கருப்பு காய்களுடன் வீழ்த்தியதன் மூலம் இந்தியாவில் 98-வது கிராண்ட் மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் 38 வதும், கன்னியாகுமரி மாவட்டத்தின் முதலாவது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார். பட்டம் பெற்று புதன் முதலாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த இளம் செஸ்வீரர் அஸ்வந்தை நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பொதுமக்கள், உறவினர்கள் அவருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர் தொடர்ந்து அவருக்கு பல்வேறு கட்சியினர் ரயில் நிலையத்திற்கு வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் முதல் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பல தரப்பினர் இளம் செஸ் வீரர் அஸ்வந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்















