விழுப்புரத்தில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகராட்சித் திடலில் டிசம்பர் 3 இயக்கம் மற்றும் விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு இணைந்து, டிசம்பர் 3 இயக்க மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை தலைமையில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் (அறம்-2) குறிப்பிட்டிருப்பது போல், வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ. 1,500-லிருந்து ரூ. 3,000-ஆகவும், நலத்துறை வழங்கும் பராமரிப்பு உதவித்தொகையை ரூ. 6,000-ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து அரசுத்துறைகளிலும் 4 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி, அரசாணை 24-ஐ ரத்து செய்துவிட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளை அரசாணை 151-ன் கீழ் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மேலும் திருநங்கைகளுக்கு வழங்கப்படுவது போல் தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணமில்லா பயண சலுகை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
பேட்டி: அண்ணாமலை.
மாநில பொதுச் செயலாளர் டிசம்பர் 3 இயக்கம்.














