மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுகவினர் காவல்துறையினரால் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டனர், , கைது செய்யப்பட்ட திமுகவினர் சென்ற வாகனங்களை மீண்டும் திமுகவினர் தடுத்து நிறுத்தினர் :-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், திமுக அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் ஊர்வலமாக பேருந்து நிலையம் நோக்கி சென்றனர், பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்ததால் திரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது, இதனைத் தொடர்ந்து ஒத்துத் துறையினர் திமுகவினரை தடுத்து நிறுத்திய போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதனை அடுத்து கச்சேரி சாலையை தடுப்பு கட்டைகளை வைத்து காவல்துறையினர் அடைத்தனர், திமுக நகர செயலாளர் செல்வராஜ் மற்றும் திமுகவினர் காவல்துறை முன்னிலையில் கடைகளை அடைக்கும்படி வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது, தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உள்ளிட்ட திமுகவினரை, காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர், அப்போது வாகனத்தில் ஏற மறுத்த திமுகவினரை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர், கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட வாகனத்தை திமுகவினர் மீண்டும் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் சிநேக பிரியா தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர், தமிழக வெற்றி கழகத்தினரின் ஆர்ப்பாட்டம் பாதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

















