அமைச்சரின் வருகைக்காக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பயனாளிகள்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட சுகாதாரத்துறை சிறுபான்மை நலத்துறை சமூக பாதுகாப்பு திட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மதியம் ஒரு மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருந்த போதும் மாலை நான்கு மணி வரை அமைச்சர் விஸ்வநாதன் வராததால் பயனாளிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். மதியம் ஒரு மணிக்கு வந்த பயனாளிகள் நிகழ்ச்சி நிறைவடைந்து மூன்று மணிக்கு வீட்டுக்கு சென்று உணவருந்தலாம் என்று இருந்த நிலையில் நான்கு மணி வரை அமைச்சர் வராததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடி உள்ள நிலையில் மதிய உணவை கூட சாப்பிடாமல் பயனாளிகள் பரிதவித்து வருகின்றனர். குறிப்பாக கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள் கடும் அவதி அடைந்தனர்.













