பெண் ஒருவருக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த முயற்சித்து தொடர் தொந்தரவு அளித்து வரும், முன்னாள் பாஜக நிர்வாகியும் தற்போதைய அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் அமைப்பின் மாவட்ட நிர்வாகி மீது திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் தனது தந்தையுடன் பெண் புகார் மனு – பேரளம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் முன்னாள் பாஜக நிர்வாகியின் செல்வாக்கால் புகாரை காவல்துறையினர் எடுக்க மறுத்ததாக பரபரப்பு புகார்*
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்காவிற்கு உட்பட்ட கூத்தனூர் பகுதியை சேர்ந்த மீனாட்சி என்பவர், திருவாரூர் மாவட்ட முன்னாள் பாஜக நிர்வாகியும், தற்போதைய அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் அமைப்பின் மாவட்ட செய்தி தொடர்பாளராக உள்ள கழுகு சங்கர் என்கின்ற சங்கர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை எழுப்பி உரிய வீடியோ ஆதாரங்களுடன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார் .
அந்த மனுவில் கூறியிருப்பதாவது…
கூத்தனூர் பகுதியை சேர்ந்த மீனாட்சி என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார் மீதமுள்ள அவரது சொந்த இடத்தில் அவரது பயன்பாட்டிற்காக சந்து உள்ளது.
இதன் வழியாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் சென்று வந்த நிலையில் இரவு நேரங்களில் மது அருந்துவதும், ஜன்னல் வழியாக டார்ச் லைட் அடிப்பது போன்ற தகாத வேலைகளில் ஈடுபட்டு வந்ததால் அங்கு தடுப்பு சுவர் எழுப்பப்பட்டு பாதை அடைக்கப்பட்டது.
இதனால் அந்தப் பாதையை பயன்படுத்திய நபர்கள் மீனாட்சியின் தந்தை மூர்த்தி என்பவர் மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு திருவாரூர் மாவட்ட முன்னாள் பாஜக நிர்வாகியும், தற்போதைய அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் அமைப்பின் மாவட்ட செய்தி தொடர்பாளராக உள்ள கழுகு சங்கர் என்கின்ற சங்கர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி காவல் நிலையத்தில் புகார் எடுக்க விடாமல் தடுத்தார்.
இதனையடுத்து இது குறித்து எங்களுக்கு சொந்தமான இடம் என்பதற்கான ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த மாதம் 24 ஆம் தேதி எங்களுக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்ட சிமெண்ட் சுவரை சட்டத்திற்கு புறம்பாக பெண்களை வைத்து அடித்து உடைக்க வைத்தனர்.
இந்த சிசிடிவி காட்சியுடன் பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும் காவல் உதவி ஆய்வாளர் புகாரை பெற மறுத்துவிட்டார்.
இதையடுத்து இரண்டு தினங்களுக்கு பின்னர் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட காரின் மீது ஏறியும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் பாஜக நிர்வாகி மீது தொடர்ந்து கேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போதும் காவல் நிலையத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை .
இதனால் மனமுடைந்த நிலையில் தொடர்ந்து எனது பெண் குழந்தையுடன் வாழ முடியாத நெருக்கடியை அளித்து வருகின்றனர்.
இதற்கு காரணமாக உள்ள திருவாரூரை சேர்ந்த அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் அமைப்பின் மாவட்ட செய்தி தொடர்பாளராக உள்ள கழுகு சங்கர் என்கின்ற சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அவர் என்னை பற்றியும் முகநூலில் அவதூரை பரப்புவதும் எதிரிகளை தூண்டி விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் இதே போன்று அதே ஊரைச் சேர்ந்த வீரப்பன் என்பவரது மகன் ரவி, ஜெயராமன் என்பவரது மகன் கார்த்தி, செந்தில், உத்தரகங்கை பகுதியை சேர்ந்த மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி மன உளைச்சலையும் ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டி வருகின்றனர். எனவே உடனடியாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குறிப்பு: தாக்குதல் சிசிடிவி காட்சிகள் உள்ளது













