மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் அருள் பிரியா தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர் அலுவலகத்தின் முக்கிய வாயில் கதவுகளை அடைத்து, ஊழியர்களை ஒரே இடத்தில் அமர வைத்து சோதனை நடைபெற்று வருகிறது இதனை முன்னிட்டு உள்ளே இருந்தவர்கள் வெளியேறவும் வெளியே இருக்கும் நபர்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.













