சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத் தொட்டியில் குவியல் குவியலாக நூற்றுக்கணக்கான, புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் கொட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு, வருவாய் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அலுவலகம் எதிரே, குப்பை கொட்டும் பகுதியில், வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன, இவற்றை அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எடுத்த பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள், தோண்ட தோண்ட புதையல் போல் வந்து கொண்டிருந்தது. சமீபத்தில் அவை எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பையில் நூற்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது














