அத்திப்பட்டி கிராமம் காணாமல் போவது போல் திரைப்படத்தில் வரும் காட்சியை மிஞ்சும் அளவிற்கு நிஜத்தில் காணாமல் போன வக்பு வாரியத்திற்கு சொந்தமான சுமார் 500 கோடி ரூபாய் சொத்துக்களை மீட்டெடுக்க பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் முறைகேடு செய்த ஆவணங்களுடன் அறவழி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஜாமியா மசூதி, லப்பை பூரா மசூதி உள்ளிட்ட 12 மசூதிகள் மற்றும் இரண்டு அறக்கட்டளைகளுககு சொந்தமாக சுமார் 200 ஏக்கருக்கும் மேலான சொத்துக்கள் உள்ள நிலையில் இந்த சொத்துக்களை முன்னாள் மற்றும் இந்நாள் முத்தவல்லிகள் வக்ஃபு வாரியத்திற்கு உரிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சொத்துக்களை பராமரித்து வந்ததாக கூறப்பட்டது.
ஆனால் உண்மையில் வக்ஃபுவாரியத்திற்கு சொந்தமாக இருந்த சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வக்பு வாரிய நிர்வாகிகளான முன்னாள் இந்நாள் முத்தவல்லிகள் முறைகேடாக விற்பனை செய்து தகவலை அறிந்த சமூக ஆர்வம் கொண்ட இஸ்லாமியர்கள் முறைகேடு செய்வதற்கான ஆதாரங்களை மூட்டை மூட்டையாக சேகரித்து பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் மனுக்களை அளித்தும் நடவடிக்கை இல்லாத நிலையில்…
இன்று திருப்பத்தூர் அடுத்த ஆசிரிய நகர் பேருந்து நிறுத்தம் அருகே முறைகேடு செய்த ஆவணங்களை பேனர்களாக தயாரித்து மூட்டை மூட்டையாக ஆவணங்களை அடுக்கி உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அறவழி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் அத்திப்பட்டு கிராமம் காணாமல் போவது போல் திரைப்படத்தில் வரும் காட்சியை மிஞ்சும் அளவிற்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் காணாமல் போனது வேதனை அளிக்கிறது இந்த சொத்துக்கள் எல்லாம் ஏழை எளிய இஸ்லாமியர்களுக்கு பயன்படக்கூடிய சொத்துக்கள் எனவே முறைகேடு செய்யப்பட்ட சொத்துக்களை மீட்டு கொடுக்க வேண்டும் எனவும் தற்போது உள்ள முத்த வல்லிகள் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்














