தரங்கம்பாடி அருகே தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி கிராமத்தில் மிகவும் பழமையான ஸ்ரீமத் மகாமாரியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது அதனைத் தொடர்ந்து நாள்தோறும் ஸ்ரீமத் மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சுவாமி வீதியுலா, மற்றும் நேற்று தீமிதி உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் மகா மாரியம்மன் எழுந்தருள செய்து மகா தீபாராதனைக் காட்டப்பட்ட்து.
தொடர்ந்து அதிர் வேட்டுகள், மங்கல வாத்தியங்கள் முழங்க திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர் தொடர்ந்து
சார்ந்தாரை காத்த சுவாமி கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளையும் வலம் வந்து தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.














