திருவாரூரில் திமுக தொகுதி தேர்தல் அலுவலகத்தை திமுக மாவட்ட செயலாளரும் வேட்பாளருமான பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார். தொடர்ந்து அவரது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக மாவட்ட செயலாளரும் வேட்பாளருமான பூண்டி கலைவாணன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே இன்று திருவாரூர் கமலாலயம் மேல்கரை பகுதியில் தொகுதி தேர்தல் அலுவலகத்தை பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார். இதனை அடுத்து பூண்டி .கலைவாணனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரமாண்டமான கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் ஒன்றிய செயலாளர்கள் தேவா , சேகர் என்கிற கலியபெருமாள், பாலசந்தர் ,பாண்டியன், மனோகரன் பால ஞானவேல் மற்றும் சிபிஎம் மாவட்ட செயலாளர் முருகையன், திராவிடர் கழகம், காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

















