மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக (தவெக) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜயாலயனுக்கு, பூம்புகார் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் மலர் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் வேட்பாளர்களை அறிவித்திருந்தார். அதில், தரங்கம்பாடி தாலுகா பொறையார் பகுதியைச் சேர்ந்த விஜயாலயன் பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த விஜயாலயனை வரவேற்க கருவி, ஆக்கூர்முக்கூட்டு, திருக்கடையூர், தரங்கம்பாடி, ராஜுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தவெக தொண்டர்கள் திரண்டனர்.
மேலும், வேட்பாளரை வரவேற்கும் வகையில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மலர்கள் தூவி, பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம் நடத்தப்பட்டது. மேலும், மலர் கிரீடம் மற்றும் மாலை அணிவித்து, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சில இடங்களில் தொண்டர்கள் குத்தாட்டம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த வரவேற்பு நிகழ்வுகள் பூம்புகார் தொகுதியில் தேர்தல் களத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது

















