திருத்தணியில் கலைஞர் நூலகம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பின்னர் ஆட்டோவை நீண்ட தூரம் ஓட்டிச் சென்ற அமைச்சர் நாசர்.
ஆட்டோவை பின் தொடர்ந்து ஓடி சென்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மா கிரண் ஏற்பாட்டில் கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்பட்டது இதை இன்று அமைச்சர் சாமு.நாசர் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ் சந்திரன் கலந்து கொண்டு கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் நலிவுற்ற ஆட்டோ தொழிலாளர் இருவருக்கு இலவசமாக ஆட்டோ வழங்கப்பட்டது. அந்த ஆட்டோவை அமைச்சர் நாசர் நீண்ட தூரம் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆட்டோவில் அமர வைத்துக் கொண்டு ஓட்டி சென்றார்.

















