மயிலாடுதுறையில் இருந்து மாசி மகத்தை முன்னிட்டு சமுத்திர தீர்த்தவாரிக்காக பூம்புகாருக்கு புறப்பட்ட புகழ் பெற்ற பரிமள ரெங்கநாதர் சுவாமிகள் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ ஆலயங்களில் 22-வது ஆலயமும், காவிரி கரையோரம் பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் காட்சிதரும் ஐந்து பஞ்சரங்க ஆலயங்களில் ஒன்றானது மான பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மகத்தை முன்னிட்டு காவிரி கடலில் கலக்கும் இடத்தில் பூம்புகாரில் கடலில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு இன்று இரவு பல்லக்கில் பெருமாள் தாயாருடன் எழுந்தருளினார். தொடர்ந்து ஆலயத்திலிருந்து வீதியுலாவாக சென்று நாளை காலை பூம்புகாரில் காவேரி கடலில் கலக்கும் இடத்தில் சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
















