மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் 73வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம். மங்க நல்லூர், வழுவூர் செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்:-
தமிழக முதலமைச்சர் 73 வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மங்கநல்லூர், வழுவூர், செம்பனார்கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மங்கநல்லூர் கிராமத்தில் குத்தாலம் ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகளை வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இதுபோல் வழுவூர் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவ சிலைக்கு வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பிரபாகர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். இதே போல் செம்பனார்கோவில் கடைவீதியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் திமுகவினர் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.














