திருவாரூர் அருகே 157.96 கோடி மதிப்பிலான மயிலாடுதுறை திருவாரூர் சாலையை முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்..
திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் பகுதியில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2.90 கி.மீ நீளமும் திருவாரூர் மாவட்டத்தில் 11.141கி.மீ நீளமும் கொண்ட 14 கிலோமீட்டர் உள்ள மாநில நெடுஞ்சாலையை 157.96 கோடி நிதி ஒதுக்கீட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், கண்காணிப்பு பொறியாளர் சென்னை
-கன்னியாகுமரி தொழில்தடத்திட்ட அலகு, திருச்சி செல்வி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர்கள் லெட்சுமிநாதன் சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத்திட்ட அலகு கும்பகோணம், வீரப்பன், உதவி கோட்ட பொறியாளர்கள் நெடுஞ்சாலைத்துறை மாரிமுத்து, பாலாஜி வெங்கடேஸ்வரன் சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத்திட்ட அலகு, நன்னிலம் பேரூராட்சி மன்றத்தலைவர் ராஜசேகர், நன்னிலம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர் மாவிக்ரம்சிங் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.













