திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20 பவுன் தங்க நகை 750 கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டு..
சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் தனது சகோதரர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலிவலம் கிராமத்தில் வீடு குடிபுகு விழாவிற்காக வந்துள்ளார். இந்த நிலையில் முத்துலட்சுமியின் தாய்வீடு திருவாரூர் நகர் பகுதியில் உள்ள விருப்பாச்சி நடப்பு தெருவில் உள்ளது அங்குள்ள வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுத்து பின்னர் ஆட்டோவில் நகைகளுடன் கூடிய பையை எடுத்துச் சென்றுள்ளார் . இதனிடையே பை கீழேதவறி விழுந்துள்ளது. இதனைப் பார்த்த திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் துறை என்பவர் மீட்டு அதனை திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனிடையே ஆட்டோவில் இருந்து இறங்கிய போது பையை காணாத முத்துலட்சுமி உடனடியாக நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். இந்தப் பையில் சுமார் 20 பவுன் தங்க நகைகளும் 750 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்துள்ளது.
தனது மகளின் திருமணம் வரும் மார்ச் எட்டாம் தேதி நடைபெற உள்ள நிலையில் நகைகளை பாதுகாப்பாக வீட்டில் வைக்காமல் எடுத்து வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நகைகள் இருந்த பையை அவர்களிடம்
விசாரித்து ஒப்படைத்தனர் .
மேலும் நகை பையை பாதுகாப்பாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு காவல் ஆய்வாளர் சந்தானமேரி தலைமையில் மாலை அணிவித்து கௌரவப்படுத்தினர்















