மயிலாடுதுறையில் செயற்கை புல்வெளி மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், நடிகை தேவயானி உள்ளிட்டோர் பங்கேற்பு, நடராஜன் வீசிய ஒரே பந்தில் கிளீன் போல்ட் ஆன நடிகை தேவயானி :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் புதிதாக செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், பிரபல திரைப்பட நடிகை தேவயானி, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர லட்சுமிநாராயணன், பிரபல நடிகர் மணி, ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் சண்முகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திறப்பு விழாவின் போது கிரிக்கெட் வீரர் நடராஜன் பந்து வீச அமைச்சர் லட்சுமி நாராயணன் நடிகை தேவயானி நடிகர் மணி உள்ளிட்டோர் விளையாடினர். அப்போது நடிகை தேவயானிக்கு வீசப்பட்ட ஒரே பந்தில் அவர் கிளீன் போல்டானார். தொடர்ந்து நடிகர் தேவயானி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் நடராஜ் ஆகியோரிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் பெற்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
டி20 உலக கோப்பை போட்டியை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் – நடராஜன் பேட்டி
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிரிக்கெட் வீரர் நடராஜன், தற்போதைய இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் . சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 260 ரன்கள் அடித்தது சிறப்பான ஒன்று என்றும், நாளை துவங்க உள்ள டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தவர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பைட் :-
நடராஜன் – இந்திய கிரிக்கெட் வீரர்

















