மதுரை மாநகர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாராபட்டி பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட அண்ணா திமுக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நூற்றுக்கணக்கான ஏழை எளிய பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கினார். அப்போது பேசிய அவர், அண்ணா திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பயன்களையும், தற்போதைய கள நிலவரங்களையும் சுட்டிக்காட்டி, கழகம் எப்போதும் சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்காகவே பாடுபடும் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளான வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், பா.குமார், கணேஸ் பிரபு, அண்ணாதுரை மற்றும் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், பரவை ராஜா, உசிலை பேராசிரியர் ஜெயபால், வி.பி.ஆர் செல்வகுமார் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் பலரும் இந்த விழாவில் திரளாகக் கலந்து கொண்டனர். தாராபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் முன்னாள் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததோடு, தங்களது கோரிக்கை மனுக்களையும் அவரிடம் நேரில் வழங்கினர். கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பெரும் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மதுரை மேற்குத் தொகுதி அண்ணா திமுகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது
















