January 31, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேசிய சாலை பாதுகாப்பு மாதம்: தேனியில் விழிப்புணர்வு பேரணி – “Zero Accident” இலக்கை வலியுறுத்திய அரசு

by Satheesa
January 30, 2026
in News
A A
0
தேசிய சாலை பாதுகாப்பு மாதம்: தேனியில் விழிப்புணர்வு பேரணி – “Zero Accident” இலக்கை வலியுறுத்திய அரசு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தேசிய சாலை பாதுகாப்பு மாதம்: தேனியில் விழிப்புணர்வு பேரணி – “Zero Accident” இலக்கை வலியுறுத்திய அரசு.

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தேனி வட்டார போக்குவரத்து துறை சார்பில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று தேனி நகரில் பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தேனி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சாலை விதிகளை முறையாக பின்பற்றி விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்பதையும், “Zero Accident” இலக்கை நோக்கி பொதுமக்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் விதமாக இந்த பேரணி நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பேரணியில், “பொதுமக்கள் தலைக்கவசம் அணிய வேண்டும்”, “வேகம் விவேகம் அல்ல” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இருசக்கர வாகனங்களின் முன்புறத்தில் பொருத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இருசக்கர வாகனங்களிலும், 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி கார்களிலும் பேரணியாகச் சென்றனர்.

தேனி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணி மதுரை சாலை, பெரியகுளம் சாலை, அன்னஞ்சி விளக்கு வழியாக தேனி நகரின் முக்கிய பகுதிகளில் வலம் வந்து பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

மேலும், ஆட்டோக்களில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்” என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

ஆண்டுதோறும் நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளில் பெரும்பாலானவை தலைக்கவசம் அணியாமை, அதிக வேகம், போக்குவரத்து சிக்னல்களை மீறுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், மொபைல் போன் பயன்படுத்திக்கொண்டு வாகனம் இயக்குதல் போன்ற விதிமீறல்களால் நிகழ்வதாக போக்குவரத்து துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள், தானியங்கி சிக்னல் அமைப்புகள், இ-சலான் முறைகள் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை செயல்படுத்தி வருகிறது.

மேலும், அதிக விபத்துகள் நடைபெறும் பகுதிகள் “பிளாக் ஸ்பாட்” என அடையாளம் காணப்பட்டு, அங்கு சாலை அகலம் அதிகரித்தல், வேகத் தடைகள், எச்சரிக்கை பலகைகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிவதை உறுதி செய்யவும், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கவும், போலீசார் மற்றும் போக்குவரத்து துறை இணைந்து தொடர் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், விபத்து நேரங்களில் உடனடி மருத்துவ உதவி கிடைக்க 108 ஆம்புலன்ஸ் சேவை வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரசு மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்த அவசர சேவை அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலை விதிகளை கடைப்பிடிப்பதே உயிர் பாதுகாப்புக்கான அடிப்படை என்றும், பொதுமக்களின் ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே “Zero Accident” இலக்கை அடைய முடியும் என்றும் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Tags: district newsNational Road SafetytamilnaduTheni – Government
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பூந்தமல்லி – தாம்பரம் வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகளில், பள்ளி மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம்

Next Post

பெரியகுளத்தில் தனியார் மகளிர் கலைக்கல்லூரியில் 55-ம் ஆண்டு மாணவிகளுக்கு கராத்தே விளையாட்டுப் போட்டி

Related Posts

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி
News

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

January 31, 2026
விடியாத ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ADMK-வினர் டிஜிட்டல் மீட்டருடன் விலைவாசி உயர்வு குறித்து பிரச்சாரம்
News

விடியாத ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ADMK-வினர் டிஜிட்டல் மீட்டருடன் விலைவாசி உயர்வு குறித்து பிரச்சாரம்

January 31, 2026
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
News

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

January 31, 2026
தரங்கம்பாடி அருகே திருமெய்ஞானத்தில் பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தை வெள்ளி மற்றும் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை
Bakthi

தரங்கம்பாடி அருகே திருமெய்ஞானத்தில் பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தை வெள்ளி மற்றும் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

January 31, 2026
Next Post
பெரியகுளத்தில் தனியார் மகளிர் கலைக்கல்லூரியில் 55-ம் ஆண்டு மாணவிகளுக்கு கராத்தே விளையாட்டுப் போட்டி

பெரியகுளத்தில் தனியார் மகளிர் கலைக்கல்லூரியில் 55-ம் ஆண்டு மாணவிகளுக்கு கராத்தே விளையாட்டுப் போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் ‘அக்னி ஸ்தலம்

தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் ‘அக்னி ஸ்தலம்

October 31, 2025
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
தேசப்பிதா காட்டிய வழியில் சமத்துவப் பயணம்… கன்னியாகுமரியில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் அதிமுக, பாஜக மீது தாக்குதல்!

தேசப்பிதா காட்டிய வழியில் சமத்துவப் பயணம்… கன்னியாகுமரியில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் மனோ தங்கராஜ் அதிமுக, பாஜக மீது தாக்குதல்!

January 31, 2026
தேசத்தின் தூண்களுக்குத் தேசப்பற்று வணக்கம்… தூய்மைப் பணியாளர்களைச் சீருடையால் சிறப்பித்த தம்பிபட்டி குடியரசு தின விழா!

போதைக்குக் கொடுப்போம் ஒருநாள் விடுமுறை… மதுவை வெல்ல மனநல மருத்துவர் ராதாகிருஷ்ணன் காட்டிய எளிய மந்திரம்!

January 31, 2026
சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

0
விடியாத ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ADMK-வினர் டிஜிட்டல் மீட்டருடன் விலைவாசி உயர்வு குறித்து பிரச்சாரம்

விடியாத ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ADMK-வினர் டிஜிட்டல் மீட்டருடன் விலைவாசி உயர்வு குறித்து பிரச்சாரம்

0
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

0
தரங்கம்பாடி அருகே திருமெய்ஞானத்தில் பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தை வெள்ளி மற்றும் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

தரங்கம்பாடி அருகே திருமெய்ஞானத்தில் பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தை வெள்ளி மற்றும் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

0
சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

January 31, 2026
விடியாத ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ADMK-வினர் டிஜிட்டல் மீட்டருடன் விலைவாசி உயர்வு குறித்து பிரச்சாரம்

விடியாத ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ADMK-வினர் டிஜிட்டல் மீட்டருடன் விலைவாசி உயர்வு குறித்து பிரச்சாரம்

January 31, 2026
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

January 31, 2026
தரங்கம்பாடி அருகே திருமெய்ஞானத்தில் பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தை வெள்ளி மற்றும் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

தரங்கம்பாடி அருகே திருமெய்ஞானத்தில் பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தை வெள்ளி மற்றும் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

January 31, 2026

Recent News

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி 50,000 ரூபாய் நிதி உதவி

January 31, 2026
விடியாத ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ADMK-வினர் டிஜிட்டல் மீட்டருடன் விலைவாசி உயர்வு குறித்து பிரச்சாரம்

விடியாத ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ADMK-வினர் டிஜிட்டல் மீட்டருடன் விலைவாசி உயர்வு குறித்து பிரச்சாரம்

January 31, 2026
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

January 31, 2026
தரங்கம்பாடி அருகே திருமெய்ஞானத்தில் பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தை வெள்ளி மற்றும் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

தரங்கம்பாடி அருகே திருமெய்ஞானத்தில் பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தை வெள்ளி மற்றும் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

January 31, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.