May 9, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மங்கலம் கிருஷ்ணாபுரத்தில் எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா முன்னாள் எம்.எல்.ஏ கரைப்புதூர் ஏ.நடராஜன் தலைமையில் அன்னதானம் வழங்கல்

by sowmiarajan
January 18, 2026
in News
A A
0
மங்கலம் கிருஷ்ணாபுரத்தில் எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா முன்னாள் எம்.எல்.ஏ கரைப்புதூர் ஏ.நடராஜன் தலைமையில் அன்னதானம் வழங்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடக்கு ஒன்றிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக நிறுவனரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா மங்கலம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில், பல்லடம் ஒன்றிய பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றுத் தங்களது தலைவருக்குப் புகழாரம் சூட்டினர்.

கிருஷ்ணாபுரம் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்குப் பல்லடம் வடக்கு ஒன்றியச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கரைப்புதூர் ஏ.நடராஜன் தலைமை தாங்கி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, அஇஅதிமுகவின் வெற்றிக் கொடியினை ஏற்றி வைத்த அவர், திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அறுசுவை அன்னதானத்தை வழங்கினார். இந்நிகழ்வின் போது எம்.ஜி.ஆரின் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்தும், அவர் தமிழகத்திற்கு ஆற்றிய சமூகப் பணிகள் குறித்தும் நிர்வாகிகள் நினைவு கூர்ந்தனர்.

இந்த விழாவில் பொதுக்குழு உறுப்பினர் தண்ணீர்பந்தல் ப.நடராஜன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட அவைத்தலைவர் மங்கலம் முருகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகளான அஸ்கர் அலி, சிராஜ்தீன், சிடிசி பழனியப்பன், நாச்சிமுத்து ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும், சின்னப்புதூர் சௌந்திரராஜன், சுப்பிரமணி, பொன்னுசாமி, கே.சி.ஆறுமுகம், பூமலூர் ராமசாமி, ராமச்சந்திரன், பருவாய் மாணிக்கம், பூமலூர் முத்துசாமி, நாசர் மற்றும் இடுவாய் ஜெ.ஜெ.மணி ஆகியோர் விழாவில் பங்கேற்றுத் தங்களது மரியாதையைச் செலுத்தினர்.

நிகழ்ச்சியில் செம்மிபாளையம் பரமசிவம் உட்பட முன்னாள் மற்றும் இன்னாள் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள், ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் எனப் பெரும் திரளானோர் கலந்துகொண்டனர். பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பால் கிருஷ்ணாபுரம் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து நடத்திய இந்த அன்னதான நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Tags: anniversary mangalamcelebrationevent karaiputhurkrishnapuram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஈரோட்டில் ஹோண்டா நிறுவனத்தின் பிரம்மாண்ட புதிய 4எஸ் விற்பனை மையம்: ‘சேயோன் ஹோண்டா’ நிலையத்தை நிறுவனம் திறந்தது

Next Post

கூவம் ஆற்றங்கரையில் 50-க்கும் மேற்பட்ட கற்சிலைகள் மீட்பு: வெளிநாட்டிற்கு கடத்த பதுக்கப்பட்டதா? – திருவள்ளூர் அருகே பரபரப்பு

Related Posts

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
News

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்
News

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
Next Post
கூவம் ஆற்றங்கரையில் 50-க்கும் மேற்பட்ட கற்சிலைகள் மீட்பு: வெளிநாட்டிற்கு கடத்த பதுக்கப்பட்டதா? – திருவள்ளூர் அருகே பரபரப்பு

கூவம் ஆற்றங்கரையில் 50-க்கும் மேற்பட்ட கற்சிலைகள் மீட்பு: வெளிநாட்டிற்கு கடத்த பதுக்கப்பட்டதா? - திருவள்ளூர் அருகே பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

0
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

0
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

0
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Recent News

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.