August 12, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கூவம் ஆற்றங்கரையில் 50-க்கும் மேற்பட்ட கற்சிலைகள் மீட்பு: வெளிநாட்டிற்கு கடத்த பதுக்கப்பட்டதா? – திருவள்ளூர் அருகே பரபரப்பு

by sowmiarajan
January 18, 2026
in News
A A
0
கூவம் ஆற்றங்கரையில் 50-க்கும் மேற்பட்ட கற்சிலைகள் மீட்பு: வெளிநாட்டிற்கு கடத்த பதுக்கப்பட்டதா? – திருவள்ளூர் அருகே பரபரப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கம் பகுதியில் கூவம் ஆற்றங்கரையோரம் 50-க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி (38) என்பவர், இன்று காலை ஆற்றங்கரையோரம் சென்றபோது கரையில் சில கற்சிலைகள் அனாதையாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில் ஊர் மக்கள் அங்கு திரண்டு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, ஆற்றுப்படுகையின் பல்வேறு இடங்களில் முருகர், விநாயகர், ஐயப்பன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கற்சிலைகள் சிதறிக் கிடப்பது கண்டறியப்பட்டது.

ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளை மீட்ட கிராம மக்கள், அவற்றை ஒன்றிணைத்து ஆற்றங்கரையிலேயே அடுக்கி வைத்தனர். தகவலறிந்த சுற்றுவட்டாரக் கிராம மக்கள் சிலைகளைப் பார்க்கத் திரண்டதால் அந்த இடமே மக்கள் கூட்டத்தால் நிரம்பியது. கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் பல கலைநயம் மிக்க பழங்கால சிலைகளாகத் தெரிந்ததால், பக்தி பரவசமடைந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் சிலைகளுக்குத் தொட்டு வணங்கி மரியாதை செலுத்தினர். இந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, திருவள்ளூர் கோட்டாட்சியர் சு. ரவிச்சந்திரன் மற்றும் வட்டாட்சியர் எஸ். பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, கடம்பத்தூர் மற்றும் திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் இருந்த சிலைகளை மீட்டுப் பாதுகாப்புடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். இந்த சிலைகள் அனைத்தும் ஒரே சீரான கற்களால் செதுக்கப்பட்டவையா அல்லது வெவ்வேறு கோயில்களுக்குச் சொந்தமானவையா என்பது குறித்துத் தொல்லியல் துறையினரின் ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும். முதற்கட்ட விசாரணையில், இவை ஏதேனும் கோயில்களில் திருடப்பட்டவையா அல்லது சிலை கடத்தல் கும்பல் இவற்றை வெளிநாடுகளுக்குக் கப்பல் மூலம் கடத்துவதற்காக இப்பகுதியில் தற்காலிகமாகப் பதுக்கி வைத்திருந்தனவா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில காலங்களாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருவதால், பிடிபடுவோம் என்ற அச்சத்தில் கடத்தல் கும்பல் இந்தச் சிலைகளை ஆற்றங்கரையில் வீசிச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. கூவம் ஆற்றின் கரையோரம் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான சிலைகள் ஒரே நேரத்தில் கண்டெடுக்கப்பட்டது, பெரும் கடத்தல் கும்பலின் பின்னணி இருப்பதை உறுதி செய்வதாகச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாகத் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, இப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய நபர்கள் குறித்துத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags: cooumincident newsriversculptures thiruvallurstonetension
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மங்கலம் கிருஷ்ணாபுரத்தில் எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா முன்னாள் எம்.எல்.ஏ கரைப்புதூர் ஏ.நடராஜன் தலைமையில் அன்னதானம் வழங்கல்

Next Post

கல்லட்டி மலைப்பாதையில் கார் தீப்பிடித்து எரிந்து சாம்பல்: ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை
News

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு
News

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 
News

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
Next Post
கல்லட்டி மலைப்பாதையில் கார் தீப்பிடித்து எரிந்து சாம்பல்: ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்

கல்லட்டி மலைப்பாதையில் கார் தீப்பிடித்து எரிந்து சாம்பல்: ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.