திருக்கடையூரில் நடைபெற்றுவரும் மாடு குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயத்தில் மாட்டு வண்டி பந்தயம் முடிவடைந்த நிலையில் குதிரை வண்டிகளுக்கான போட்டி துவக்கம்:- சீறிப்பாய்ந்த குதிரைகள்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் காணும் பொங்கல் ஆன இன்று 46 ஆம் ஆண்டு மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் துவங்கி நடைபெற்று வருகிறது. மாட்டு வண்டிகளுக்கான பந்தயம் முடிவடைந்த நிலையில் குதிரை வண்டிகளுக்கான பந்தயம் துவங்கி நடைபெற்று வருகிறது. புதுக்குதிரை கரிச்சான் குதிரை நடுக்குதிரை பெரிய குதிரை என்று நான்கு பிரிவுகளில் போட்டி நடைபெற்று வருகிறது. புது குதிரைகளுக்கான போட்டியில் குதிரை வண்டிகள் சீறிப்பாய்ந்தன. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ரேக்ளா பந்தயங்களை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
















