திருவாரூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையிணை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வழங்கினார்.
திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த முகாமில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவ பரிசோதனையுடன் முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனைகளும், ஆரம்ப கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் உள்ளிட்ட 15 துறைகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கினர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பயனாளிகளுக்கு வழங்கினார்.இம்முகாமில், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோக், மாவட்ட சுகாதார அலுவலர் சங்கீதா, இணை இயக்குனர் சுரேஷ், வட்டார மருத்துவ அலுவலர் குருதேவ், திருவாரூர் வட்டாட்சியர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

















